மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோவா: டிஎம்சி-க்கு எல்லா இடங்களிலும் பின்னடைவு

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) அனைத்து இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:30 am

DIN


கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) அனைத்து இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதன்முறையாகப் போட்டியிட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் 4 இடங்களில் திரிணமூல் முன்னிலை வகித்தது. ஆனால், தற்போது எந்தவொரு இடத்திலும் திரிணமூல் முன்னிலை வகிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் பிற்பகல் 3.15 நிலவரப்படி திரிணமூல் 5.22 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 7.65 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. சில தொகுதிகளில் திரிணமூல் வேட்பாளர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை வகிக்கின்றனர்.  

திரிணமூல் மாநிலத் தலைவர் கிரண் கண்டோல்கர் உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்களே பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

"இந்தத் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து கோவா மக்களின் நம்பிக்கை மற்றும் அன்பை ஈட்ட கடுமையாக உழைப்பதற்கு உறுதி கொண்டுள்ளோம். அதற்கு எத்தனை காலம் எடுத்துக்கொண்டாலும் சரி. நாங்கள் இங்கேயேதான் இருப்போம். கோவா மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவோம்" என்று திரிணமூல் காங்கிரஸின் கோவாவுக்கான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.