எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அம்மாநிலத்திற்கான பொறுப்பாளர் சஞ்சய் பாஷு திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2022, 11:24 am

DIN

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அம்மாநிலத்திற்கான பொறுப்பாளர் சஞ்சய் பாஷு திங்கள்கிழமை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் பேரவைகளுக்கான தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. இதில், பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதன்மூலம், ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க ஆம் ஆத்மி பொறுப்பாளர் சஞ்சய் பாஷு இன்று வெளியிட்ட செய்தியில்,

“மேற்கு வங்கத்தில் வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும். கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்படி, ஏற்கனவே பிரசாரங்களை தொண்டர்கள் தொடங்கிவிட்டனர். மார்ச் 13ஆம் தேதி கொல்கத்தாவில் பேரணியும் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.”

மேலும், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குஜாராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.