ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

3டி தொழில்நுட்பத்தில் 4 வாரங்களில் கட்டி முடித்த 2 வீடுகள்: ராணுவ பொறியாளர்கள் அசத்தல்

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3டி தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி ராணுவ பொறியாளர்கள் 4 வாரங்களில் இரண்டு வீடுகளைக் கட்டி முடித்து அசத்தியுள்ளனர். 

News image

3டி தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி ராணுவ பொறியாளர்கள் கட்டி முடித்த வீடுகள்

Updated On :14 மார்ச் 2022, 9:54 pm IST

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3டி தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி ராணுவ பொறியாளர்கள் 4 வாரங்களில் இரண்டு வீடுகளைக் கட்டி முடித்து அசத்தியுள்ளனர். 

சென்னையைச் சேர்ந்த டிவாஸ்டா (Tvasta) நிறுவனத்தின் உதவியுடன் இந்திய ராணுவம் இதனை செய்து முடித்துள்ளது.

ராணுவ வீரர்கள் முகாமிட்டு தங்கி வருவதைப்போன்று, அதிக அளவிலான ராணுவ வீரர்கள் தங்கும் வகையில் ராணுவப் பொறியியல் சேவையைச் சேர்ந்த பொறியாளர்கள் குறைந்த கால அளவில் வீடுகளைக் கட்டி முடித்துள்ளனர். 

குஜராத் மாநிலம் காந்தி நகரின் தென்மேற்கு ராணுவ தளத்தில் 3 டி தொழில் நுட்பத்தின் ரேபிட் கட்டுமான முறையைப் பயன்படுத்தி, இரண்டு கட்டடங்களை ராணுவத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் கட்டி முடித்துள்ளனர். 

700 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் இரண்டு வாரங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த முறையைப் பயன்படுத்தி முதல் முறை வீடுகள் கட்டப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.