இந்தோனேசியாவில் 8 இந்திய மீனவர்கள் கைது 

அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் அண்டை நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் அண்டை நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விசாரித்து வருவதாக யூனியன் பிரதேசத்தின் மீன்வளத் துறை இயக்குநர் உத்பால் குமார் சார் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் 8 மீனவர்களுடன் 'எம்வி பிளஸ்ஸிங்' என்ற மீன்பிடிக் கப்பல் எஞ்சின் கோளாறு அல்லது பலத்த காற்று காரணமாக இந்தோனேசியாவின் கடல் பகுதிக்கு சென்றிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

தென்கிழக்கு ஆசியாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக இந்தோனேசிய கடலோர அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளதாக மீன்வளத் துறை இயக்குநர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com