உத்தரப்பிரதேசத்தில் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு
உத்தரப்பிரதேசத்தில் கரோனாவின் மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுவதுமாக அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது.


உத்தரப்பிரதேசத்தில் கரோனாவின் மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுவதுமாக அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்ட அம்மாநில அரசு, மாநிலம் முழுவதும் நீச்சல் குளங்கள், நீரியல் பூங்காக்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் முழுவதுமாக இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'பீஸ்ட்' பாடலான ஜாலியோ ஜிம்கானாவுக்கு உண்மையான அர்த்தம் இதுவா ?
புதிய அறிவிப்புகளின்படி திருமணங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் முழு எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் மீதான கட்டுப்பாடுகளையும் மாநில அரசு நீக்கியுள்ளது. அவை அனைத்தும் 100 சதவீதம் முழுமையாகச் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...