அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உக்ரைனில் இறந்த மாணவரின் உடல் வரும் ஞாயிறு பெங்களூரு வந்தடையும்: முதல்வர் பசவராஜ் பொம்மை

உக்ரைனில் இறந்த மாணவரின் உடல் வரும் ஞாயிறு அன்று பெங்களூரு வந்தடையும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :18 மார்ச் 2022, 3:16 pm

DIN

உக்ரைனில் இறந்த மாணவரின் உடல் வரும் ஞாயிறு அன்று பெங்களூரு வந்தடையும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

கா்நாடகம் மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சோ்ந்த நவீன் ஞானகௌடா், உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தாா். உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ளதால், அங்கு நடந்த தாக்குதலில்சிக்கி நவீன் ஞானகௌடா் இறந்துவிட்டாா். 

தகவல் கிடைத்ததும், நவீன ஞானகௌடா் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிரதமர் மோடி, முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தது. 

இந்த நிலையில் உக்ரைனில் இறந்த மாணவரின் உடல் வரும் ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பெங்களூரு விமான நிலையம் வந்தடையும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.