சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அழுத்தம் தரும் அதிருப்தி தலைவர்கள்...குலாம் நபி ஆசாத்தை சந்திக்கிறாரா சோனியா காந்தி?

காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் தலைமையில் ஆலோசனை நடத்திய நிலையில், சோனியா காந்தி அவரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 மார்ச் 2022, 6:15 am

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர் குலாப் நபி ஆசாத்தை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் தலைமையில் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், சோனியா காந்தி அவரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காந்தி குடும்பத்தின் ஆதரவாளர்கள் எடுத்த நிலைபாடு காரணமாக ஜி - 23 என சொல்லப்படும் அதிருப்தி குழுவை சேர்ந்த தலைவர்கள் வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 
புதன்கிழமை முதல், அவர்கள் பல முறை கூடி ஆலோசனை நடத்தினர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சியில் தாங்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து விலகுவதாக செயற்குழு கூட்டத்தில் கூறியுள்ளனர். ஆனால், செயற்குழு அதை ஏற்கவில்லை. இதற்கு மத்தியில், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என ஜி-23 தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தொடர் தோல்வி காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு, அவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

பின்னர், இவர்கள் புதின்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து மட்டங்களிலும் அனைவரையும் உள்ளடக்கி கூட்டுத் தலைமையை கடைபிடித்து முடிவெடுக்கும் மாதிரியைக் கடைப்பிடிப்பதே காங்கிரஸ் கட்சியிக்கு இருக்கும் ஒரே வழி. கட்சியை பலப்படுத்துவே விரும்புகிறோம். பலவீனமாக்க விரும்பவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவை, ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார். இவர், புதன்கிழமை நடைபெற்ற ஜி - 23 தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அப்போது, கட்சியின் முடிவுகளை யார் எடுப்பது என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகளை நாளிதழ்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.