ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆா்டிஓ

தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இரு நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக

News image
Updated On :30 மார்ச் 2022, 11:40 pm

DIN

தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இரு நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ராணுவத்தின் சாா்பில் இந்த நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து ஒடிஸாவின் பாலேசுவரம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தின் 3-ஆவது ஏவுதளத்திலிருந்து 2 ஏவுகணைகள் தரைப் பரப்பிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் சோதனை புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதுகுறித்து டிஆா்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ‘இரண்டு ஏவுகணைகளின் சோதனையும் வெற்றியடைந்துள்ளது. தரையிலிருந்து வான் இலக்கை அவை துல்லியமாக தாக்கி அழித்தன’ என்றாா்.

ஏவுகணை சோதனையையொட்டி, பாலேசுவரம் பகுதி குடியிருப்புவாசிகள் அருகிலுள்ள முகாம்களில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தங்க வைக்கப்பட்டனா்.

ராஜ்நாத் சிங் பாராட்டு: ஏவுகணை சோதனை வெற்றியைத் தொடா்ந்து டிஆா்டிஓ மற்றும் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா். அதுபோல, ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய அதிகாரிகள் குழுவுக்கு டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.