புது தில்லி: மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை நாளை, நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். புனித நதிகளில் நீராடி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
வாராணசியில் உள்ள ஏராளமான பக்தர்கள் புனித கங்கையில் நீராடி, விஷ்ணுவையும் லஷ்மியையும் வழிபட்டனர்.
இதையும் படிக்க.. நாளை தொடங்குகிறது அனல் தகிக்கும் அக்னி நட்சத்திரம்
கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள் பலரும், இன்று இந்த கங்கையில் புனித நீராடியதை பெரும்பாக்கியமாகக் கருதுகிறோம். இன்று குடும்பத்துடன் இங்கே இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகம் கரோனா பேரிடரிலிருந்து விடுபட இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் என்றனர்.
இதுபோல, பிரயாக்ராஜ் பகுதியிலும் ஏராளமான மக்கள் கங்கையில் நீராடி சிறப்புவழிபாடுகளை நடத்தினர்.
அட்சய திருதியை நாளை முன்னிட்டு ஏராளமான தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



