தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

ஜோத்பூர் கலவரம்: மே 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் உள்ள 10 காவல் நிலையங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 6 நள்ளிரவு வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :5 மே 2022, 12:46 pm IST

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் உள்ள 10 காவல் நிலையங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 6 நள்ளிரவு வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஜோத்பூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது. இது தொடர்பாக இதுவரை 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க தற்போது மே 6ம் தேதி  வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மறு உத்தரவு வரும் வரை இணையதள சேவைகள் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகர் முழுவதும் ஊரடங்கு முறையாகப் பின்பற்றப்படுவதாகவும், தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமை இயக்குனர் எம்எல் லாதர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.