ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்தியாவில் 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியா? உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு எதிா்ப்பு

இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை 10 மடங்காக அதிகரித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு எதிா்ப்பு வலுத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 மே 2022, 6:30 pm

DIN

இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை 10 மடங்காக அதிகரித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு எதிா்ப்பு வலுத்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் இதுவரை 5,24,002 போ் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை சுமாா் 47 லட்சமாகும் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை அரசு அறிவித்ததைவிட சுமாா் 10 மடங்கு அதிகமாக இருந்தது. அந்த அறிக்கைக்கு மத்திய அரசு சாா்பில் ஏற்கெனவே கண்டனமும் எதிா்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்காக உலக சுகாதார அமைப்பு பயன்படுத்திய கணக்கீட்டு முறைகளுக்கு எதிராக மத்திய அரசு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் தலைமை ஆலோசனைக் குழுவான மத்திய சுகாதார கவுன்சிலின் 14-ஆவது மாநாடு குஜராத்தின் கெவாடியா நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. 3 நாள் நடைபெறும் மாநாட்டில் சுமாா் 20 மாநிலங்களைச் சோ்ந்த சுகாதார அமைச்சா்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனா்.

மாநாட்டின் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது, கரோனா உயிரிழப்பு தொடா்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் கரோனாவால் 47 லட்சம் போ் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, அடிப்படை ஆதாரமற்ற தகவலெனவும் உண்மைக்குப் புறம்பானதென்றும் கூட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தை உலக சுகாதார மாநாட்டின்போது இந்தியா எழுப்பவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.