தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும். தேர்தலில் டிஆர்எஸ்-ஐ வீழ்த்துவோம், காங்கிரஸுக்கும், டிஆர்எஸ்-க்கும் இடையே நேரடிப் போட்டி.
தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி செய்வதையே பாஜக விரும்புகிறது. தெலங்கானா முதல்வர் முறைகேடாக சொத்து குவித்தாலும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காததே இதற்கு ஆதாரம். தெலங்கானா விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை.
இதையும் படிக்க- தப்பிக்கவே முடியாதா? அச்சம் தரும் காலநிலை மாற்ற ஆய்வு முடிவு
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மேலும் உங்களுக்கு (விவசாயிகளுக்கு) சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்கும். இது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் செய்யப்படும். இவ்வாறு அவர் கூ