நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது!

தலைநகர் தில்லியில் மதுபானப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அம்மாநில அரசு விரைவில் வெளியிட உள்ளது.

News image
Updated On :7 மே 2022, 12:58 pm IST

தலைநகர் தில்லியில் மதுபானப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அம்மாநில அரசு விரைவில் வெளியிட உள்ளது. 

ஆம், இனி தில்லியில் உள்ள பார்களில் அதிகாலை 3 மணி வரை மதுப்பிரியர்கள் மதுபானத்தை அருந்தி மகிழலாம். ஆனால், இதுதொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. 

2021-22 கலால் கொள்கையின்படி விரைவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மாற்றப்படும் புதிய நேரங்களைப் பாதுகாப்பாக செயல்படுத்துவதற்காக தில்லி காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடன் அரசு ஒருங்கிணைத்து வருவதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக துணை முதல்வர் மனிஷ் சிசோடியோ வியாழனன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், 

உணவகங்கள் மூடும் நேரத்தை அதிகாலை 3 மணி வரை நீட்டிக்குமாறும், இதனால் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். 

குருகிராம் மற்றும் நொய்டா உள்ளிட்ட என்சிஆர் நகரங்களின் செயல்பாட்டு நேரங்களுக்கு ஏற்ப அதிகாலை 3 மணி வரை உணவகங்களின் இயக்க நேரத்தை அனுமதிக்கும். இதுதொடர்பாக தில்லி காவல்துறை உள்ளிட்ட பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.