எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மருத்துவம் படிக்க ஆசை: சிறுமியின் பதிலால் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி

ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய் என்கிற கேள்விக்கு சிறுமி அளித்த பதிலால் பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டார்.

News image
Updated On :12 மே 2022, 1:16 pm

DIN

ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய் என்கிற கேள்விக்கு சிறுமி அளித்த பதிலால் பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டார்.

குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் பயனாளிகள் நிதியுதவி பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட 4 முக்கிய திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக பெரிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில், இத்திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பல பயனாளிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கானொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடி பயனாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, பார்வையற்ற பயனாளி ஒருவரிடம் பேசும்போது ‘உங்கள் மகள்களை என்ன படிக்க வைக்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.

இதற்கு அந்தப் பயனாளி ‘என் மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்’ எனக் கூறினார்.

பின், அவர் மகளுடன் பேசிய மோடி ‘ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய்?’ எனக் கேட்டதற்கு அச்சிறுமி ‘என் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பையும், அவர் படும் துன்பத்தையும் பார்த்ததால் நான் மருத்துவர் ஆக விரும்பினேன்’ என்றபடி பார்வையற்ற தன் தந்தையின் தோளில் சாய்ந்து  அழ ஆரம்பித்தார்.

இதைப்பார்த்த பிரதமர் மோடி, சில நொடிகள் மேற்கொண்டு பேசமுடியாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். பின்பு ‘கருணைதான் உங்களின் வலிமை. உங்கள் படிப்பிற்கு எதாவது உதவி தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.