வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மருத்துவம் படிக்க ஆசை: சிறுமியின் பதிலால் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி

ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய் என்கிற கேள்விக்கு சிறுமி அளித்த பதிலால் பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டார்.

News image
Updated On :12 மே 2022, 6:46 pm IST

ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய் என்கிற கேள்விக்கு சிறுமி அளித்த பதிலால் பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டார்.

குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் பயனாளிகள் நிதியுதவி பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட 4 முக்கிய திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக பெரிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில், இத்திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பல பயனாளிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கானொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடி பயனாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, பார்வையற்ற பயனாளி ஒருவரிடம் பேசும்போது ‘உங்கள் மகள்களை என்ன படிக்க வைக்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.

இதற்கு அந்தப் பயனாளி ‘என் மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்’ எனக் கூறினார்.

பின், அவர் மகளுடன் பேசிய மோடி ‘ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய்?’ எனக் கேட்டதற்கு அச்சிறுமி ‘என் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பையும், அவர் படும் துன்பத்தையும் பார்த்ததால் நான் மருத்துவர் ஆக விரும்பினேன்’ என்றபடி பார்வையற்ற தன் தந்தையின் தோளில் சாய்ந்து  அழ ஆரம்பித்தார்.

இதைப்பார்த்த பிரதமர் மோடி, சில நொடிகள் மேற்கொண்டு பேசமுடியாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். பின்பு ‘கருணைதான் உங்களின் வலிமை. உங்கள் படிப்பிற்கு எதாவது உதவி தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.