சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இலங்கைக்கு 65,000 டன் யூரியா: அனுப்புகிறது இந்தியா

இலங்கைக்கு 65,000 டன் யூரியா உரத்தை இந்தியா அனுப்பவிருக்கிறது.

News image
Updated On :14 மே 2022, 6:44 pm

DIN

இலங்கைக்கு 65,000 டன் யூரியா உரத்தை இந்தியா அனுப்பவிருக்கிறது.

இதுகுறித்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடப்பு சாகுபடி பருவத்துக்குத் தேவையான உரத்தை உடனடியாக அனுப்ப இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அதனை ஏற்று, இலங்கைக்கு 65,000 டன் யூரியாவை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உரம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இலங்கைக்கு யூரியாவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய உரத் துறை செயலா் ராஜேஷ் குமாா் சதுா்வேதியை இந்தியாவுக்கான இலங்கை தூதா் மிலிந்த மொரகொட தில்லியில் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, 65,000 டன் யூரியாவை இலங்கைக்குப் பெற்றுத் தர உதவியமைக்காக சதுா்வேதிக்கு அவா் நன்றி தெரிவித்தாா் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.