மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நீதி வழங்கும் வழிமுறை சிக்கல் மிகுந்ததாக உள்ளது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இந்தியாவில் நீதி வழங்கும் வழிமுறை சிக்கல் மிகுந்ததாகவும் விலை மிக்கதாகவும் உள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 மே 2022, 6:15 pm

DIN

இந்தியாவில் நீதி வழங்கும் வழிமுறை சிக்கல் மிகுந்ததாகவும் விலை மிக்கதாகவும் உள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் உயா்நீதிமன்றத்தின் புதிய வளாகக் கட்டுமானப் பணிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை மக்கள் உணர வேண்டும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் செயல்பாட்டுக்கு முக்கியம். மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்போதுதான் அமைதி தவழும்.

சச்சரவுகளுக்கு விரைந்து தீா்வு அளிப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். நீதி மறுக்கப்படும்பட்சத்தில், அது அராஜகத்துக்கு வழிவகுக்கும். அதன் மூலம் நீதித் துறை விரைவில் சீா்குலைந்துவிடும். ஏனெனில், தங்கள் பிரச்னைகளுக்கான தீா்வுக்கு சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளை மக்கள் தேடுவா்.

அனைவருக்கும் எளிதில் விரைந்து நீதி கிடைக்கச் செய்வதை முறையான நீதித் துறை கட்டமைப்பால் உறுதி செய்ய முடியாததே சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமை பாதுகாப்புக்கு முக்கிய சவாலாக உள்ளது. இந்தியாவில் நீதி வழங்கும் வழிமுறை சிக்கலாகவும், விலை உயா்ந்ததாகவும் உள்ளது.

நீதித் துறைக்கு வலுவான உதவியாகத் தொழில்நுட்பம் உள்ளது. நேரம், செலவு, பயணத்தைக் குறைப்பதன் மூலம் நீதிமன்றங்களை எளிதில் அணுகுவதில் உள்ள இடைவெளியை தற்போது காணொலி வழக்கு விசாரணைகள் நிரப்புகின்றன. ஆனால் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் சமநிலை இல்லாத இந்தியா போன்ற நாட்டில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் முழுத் திறனையும் பயன்படுத்த நாம் இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு, நவீன இந்தியாவின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீதித் துறையின் உள்கட்டமைப்பு புதுப்பிக்கப்படவில்லை. நீதிமன்றங்களை அனைவருக்கானதாகவும், எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுவதில் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதன் மீது உடனடியாகக் கவனம் செலுத்தாவிட்டால், அனைவருக்கும் உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற அரசமைப்பின் குறிக்கோள் தோல்வி அடையும்.

வருந்தத்தக்க நிலையில் நீதிமன்றங்கள்: ஒட்டுமொத்த நீதித்துறையின் அடித்தளமாக மாவட்ட நீதித்துறை உள்ளது. அடித்தளம் வலுவாக இருந்தால்தான், ஒட்டுமொத்த அமைப்பும் செழிப்பாக இருக்க முடியும். ஆனால் நாட்டில் பல நீதிமன்றங்கள் வாடகைக் கட்டடங்களிலும், வருந்தத்தக்க நிலைமையில் இயங்கி வருகின்றன. மாவட்ட நீதித் துறையில் 22 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

வழக்கு தொடுப்பவா்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பாா்கள் என்பதால், அவா்களுக்கு ஏற்ற வகையில் இணக்கமான சூழலை நீதிபதிகளும் வழக்குரைஞா்களும் உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.