காஷ்மீரில் மே 21-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு மிா்வாய்ஸ் உமா் பாரூக் தலைமையிலான ஹுரியத் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது: ஹுரியத் தலைவா் மெளல்வி முகமது ஃபாரூக் மற்றும் அப்துல் கனி லோன் நினைவு தினம் மே 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது.
அவா்களின் நினைவு தினத்தையொட்டி காஷ்மீரில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முகமது பாரூக், கனி லோன் தலைவா்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்துக்கு பொதுமக்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என ஹுரியத் மாநாட்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.