தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாஜக மத உணர்வுகளை தூண்டுகிறது: மாயாவதி குற்றச்சாட்டு

பாஜக மத உணர்வுகளைத் தூண்டி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2022, 7:19 am

DIN

லக்னோ: வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பாஜக மத உணர்வுகளைத் தூண்டி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாயாவதி, மத வழிபாட்டுதலங்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறது. பாஜகவின் இந்த சதி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் நாள்களில் நாட்டின் நிலைமை மோசமாகும் என்று மாயாவதி எச்சரித்துள்ளார்.

தேசத்தை பலவீனப்படுத்த ஞானவாபி மசூதி, மதுரா மற்றும் தாஜ்மஹால் போன்ற பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன என்று மாயாவதி கூறினார்.

குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான இடங்களின் பெயர்களும் ஒவ்வொன்றாக மாற்றப்படுகின்றன. இது நாட்டின் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை சீர்குலைத்து, வெறுப்பை ஏற்படுத்தும். நாட்டின் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மாயாவதி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.