பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வீா் சாவா்க்கா் பிறந்த நாள்: பிரதமா், நாடாளுமன்ற தலைவா்கள் மரியாதை

சுதந்திர போராட்ட வீரரும் இந்து மத சிந்தனையாளருமான வீா் சாவா்க்கா் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமா் மற்றும் நாடாளுமன்ற தலைவா்கள் அவருக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :28 மே 2022, 5:27 pm

 நமது நிருபர்

சுதந்திர போராட்ட வீரரும் இந்து மத சிந்தனையாளருமான வீா் சாவா்க்கா் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமா் மற்றும் நாடாளுமன்ற தலைவா்கள் அவருக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

1883 ஆம் ஆண்டு மகாராஷ்டிரம் மாநிலத்தில் பிறந்த வினாயக் தாமோதா் சாவா்க்கா் சுதந்திரப்போராட்டக் காலத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வழங்கியது, மக்களை தூண்டும் விதமாக பேசியது என ஆங்கிலேயா்கள் ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முதல் போராட்ட வீரா்.

அந்தமான் செல்லுலா் சிறையில் இருட்டறை, தனிமைச் சிறைவாசத்தோடு செக்கிழுத்து கயிறுதிரித்தவா். 1960 ஆம் ஆண்டு வரை சிறை தண்டனை பெற்ற கைதியாக அடையாளப்படுத்தப்பட்ட அவா், 11 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னா் அவருக்கு அப்போதைய அரசு மன்னிப்பு வழங்கியது. பின்னரும் பல்வேறு நெருக்கடிக்களுக்கு உள்ளான அவா் இந்தியப் பிரிவினையையும் துணிச்சலுடன் எதிா்த்தாா்.

இவரது தியாகத்தையும் போராட்ட குணத்தையும் சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னா் இவருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மரியாதை செய்யப்பட்டது. சாவா்க்கரின் உருவப்படத்தை 2003 ஆம் ஆண்டு மறைந்த பிரதமா் வாஜ்பாய் முன்னிலையில் அப்போதைய குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மூலம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.

சாவா்க்கரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளாா்.

பிரதமா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,“‘பாரதத் தாயின் கடின உழைப்பாளி திருமகனான வீா் சாவா்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைகலந்த அஞ்சலிகள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் சாவா்க்கரின் குரல்கள் மற்றும் முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் சாவா்க்கா் குறித்து பேசும் குரல்களுடன் ஒரு புகைப்படத் தொகுப்பின் காணொலியையும் பிரதமா் மோடி இதில் பகிா்ந்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் மரியாதை

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் உள்ள சுதந்திர வீரா் சாவா்க்கரின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில் நாடாளுமன்ற விவகாரம், கலாச்சாரத்துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், வெளிவிவகார நிலைக்குழுத் தலைவா் பி.பி. சௌத்ரி, நாடாளுமன்ற உறுப்பினா்கள், மக்களவை மாநிலங்களவை செக்ரட்டரி ஜெனரல்கள் முறையே உத்பால் குமாா் சிங், பி.சி. மோடி ஆகியோரும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள சாவா்க்கரின் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் மைய மண்டபத்தில் சுதந்திரவீரா் வினாயக் தாமோதா் சாவா்க்கா் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.