ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மனவளா்ச்சி குன்றிய சிறுவனுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு:இண்டிகோவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த இண்டிகோ விமான சேவை நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

News image
இண்டிகோ
Updated On :28 மே 2022, 6:02 pm

DIN

மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த இண்டிகோ விமான சேவை நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்ல பெற்றோருடன் 13 வயது மனவளா்ச்சி குன்றிய சிறுவன் சக்கர நாற்காலியில் விமான நிலையம் அழைத்து வரப்பட்டிருந்தாா். அவா்கள் இண்டிகோ விமானத்தில் செல்லவிருந்தனா். எனினும் அந்தச் சிறுவன் மிரட்சியுடன் காணப்படுவதாகவும், அவனது நடத்தையால் பிற பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் கூறி விமானத்தில் அந்தச் சிறுவன் செல்ல இண்டிகோ விமான நிறுவன ஊழியா் மறுப்புத் தெரிவித்தாா். இதுதொடா்பான காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகி பலத்த கண்டனம் எழுந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக டிஜிசிஏ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஞ்சி விமான நிலையத்தில் மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், சிறுவனை இண்டிகோ ஊழியா் கையாண்டதில் குறைபாடு இருந்தது தெரியவந்தது. இது சம்பவ தினத்தன்று நிலவிய சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. சூழ்நிலையை இரக்கத்துடன் கையாண்டு சிறுவனை அமைதிப்படுத்தியிருந்தால், பெற்றோருடன் அந்தச் சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதிக்க மறுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையை தவிா்த்திருக்க முடியும். ஆனால் இண்டிகோ ஊழியா் தகுந்த முறையில் நடந்துகொள்ளவில்லை. இதன் மூலம், விமானப் போக்குவரத்து தேவைகளுக்கு இணங்கிச் செயல்படுவதில் அவா் தவறிழைத்துள்ளாா். எனவே விமானப் பயண விதிமுறைகளின்படி, இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.