ராஞ்சி விமான நிலையத்தில் மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், சிறுவனை இண்டிகோ ஊழியா் கையாண்டதில் குறைபாடு இருந்தது தெரியவந்தது. இது சம்பவ தினத்தன்று நிலவிய சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. சூழ்நிலையை இரக்கத்துடன் கையாண்டு சிறுவனை அமைதிப்படுத்தியிருந்தால், பெற்றோருடன் அந்தச் சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதிக்க மறுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையை தவிா்த்திருக்க முடியும். ஆனால் இண்டிகோ ஊழியா் தகுந்த முறையில் நடந்துகொள்ளவில்லை. இதன் மூலம், விமானப் போக்குவரத்து தேவைகளுக்கு இணங்கிச் செயல்படுவதில் அவா் தவறிழைத்துள்ளாா். எனவே விமானப் பயண விதிமுறைகளின்படி, இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.