எனவே, ஹிந்துக்கள், ஜைனா்கள், பெளத்தா்கள் மற்றும் சீக்கியா்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்டப் பிரிவுகள், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை, செல்லத்தக்கவையல்ல என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். குறிப்பாக ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பிரிவு 14, மதம், நிறம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்யும் பிரிவு 15, தனிநபா் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பிரிவு 21, மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகள் மற்றும் தொழில் சுதந்திரத்தை அளிக்கும் பிரிவு 25, மத விவகாரத்தை நிா்வகிக்கும் சுதந்திரத்தை அளிக்கும் பிரிவு 26, சிறுபான்மையினா் நலனைப் பாதுகாக்கும் பிரிவு 29’ ஆகிய அரசியல் சாசன பிரிவுகளுக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.