ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெங்களூருவில் மருத்துவமனையின் முகப்பு சரிந்து விபத்து: 4 பேர் மீட்பு

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் முகப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

News image
Updated On :31 மே 2022, 8:31 am

DIN

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் முகப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இன்று காலை 6.15 மணியளவில் செயின்ட் மார்த்தா தனியார் மருத்துவமனையின் முகப்பு வளைவு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

கர்நாடக தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணியை மேற்கொண்டர். பின்னர் தொழிலாளர்கள் மொயுதீன், சந்த் பாஷா, ரபி சாப், பசவராஜ் ஆகியோர் மீட்கப்பட்டனர். 

மத்தியப் பிரிவு மருத்துவர் எஸ்.டி. சரணப்பா கூறியதாவது: 

சம்பவம் தொடர்பாக ஆவணங்களைச் சரிபார்த்து நடவடிக்கை எடுப்போம் என்றார். 

போதிய சுமை தாங்கும் தூண்கள் பொருத்தப்படாததால் போர்டிகோ இடிந்து விழுந்ததாக போலீஸ் வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.