அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மும்பையில் புதிய சிறைச்சாலை அமைக்க மகாராஷ்டிர அரசுத் திட்டம்!

மும்பையில் புதிய சிறைச்சாலை மற்றும் ஏழு காவல் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாகத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:43 am

DIN

மும்பையில் புதிய சிறைச்சாலை மற்றும் ஏழு காவல் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாகத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பதிவில், 

மாநிலத் தலைநகர் மும்பை, நாக்பூர் மற்றும் புணே ஆகிய இடங்களில் புதிய சிறைச்சாலைகளின் தேவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் செவ்வாயன்று கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போது மும்பையில் ஆர்தர் சாலையில் ஒரே ஒரு சிறைச்சாலை மட்டுமே உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் சிறந்த தரமான வேலை எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். 

மேலும், காவலர் குடியிருப்புகளுக்கு அரசிடம் இருந்து நிதிப் பற்றாக்குறை ஏற்படாது என உறுதி அளித்தார். மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள காவலர் குடியிருப்புகளை மறுசீரமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

15 புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டன, ஆறு மாதங்களில் மேலும் 10  காவல் நிலையங்கள் தயாராகிவிடும். மகாராஷ்டிரா முழுவதும் 457 காவலர் குடியிருப்பு, 53,860 காவலர்களுக்கான வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

மகாராஷ்டிரத்தில் 87 புதிய காவல் நிலையங்களும், மும்பையில் 7 காவல் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவசரமாகத் தேவைப்படும் திட்டங்களை முதலில் எடுத்து விரைந்து முடித்து, பின்னர் கட்டம் வாரியாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாத்தியமான இடங்களில், காவல் நிலையத்திற்கு அருகிலேயே காவலர் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.