திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கார் மீது கற்கள் வீசி தாக்குதல்..!

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

News image
Updated On :5 நவம்பர் 2022, 11:28 am IST


ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை தமது பாதுகாப்பு வாகனங்களுடன் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்றுக் கொண்டிருந்த போது, என்.டி.ஆர் மாவட்டம் நந்திகர்மா என்ற இடத்தில் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. 

இந்த தாக்குதலில் நாயுடுவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி (சிஎஸ்ஓ) மதுபாபு என்பவர் காயமடைந்தார்.

அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு காயமின்றி தப்பினார். உடனே அருகில் இருந்த நபரிடம் இருந்த மைக்கை வாங்கிய நாயுடு, கற்களை வீசியவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து, ஜக்கையப்பேட்டை போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்து துணை காவல் ஆணையர் மேரி பிரசாந்தி மற்றும் பிற மூத்த காவல்துறை அதிகாரிகள் கூடுதல் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

Story image

கற்களை வீசியவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த சந்திரபாபு நாயுடு.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க  சந்திரபாபு அழைப்பு: 
ஆந்திரம் மாநிலத்தில் அனைத்து பிரிவினரும் ஏதாவதொரு விதத்தில் சிக்கலை எதிர்கொண்டு வருவதால் வரும் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று நாயுடு மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நந்திகர்மாவில் உள்ள காந்தி மையத்தில் நடைபெற்ற சாலைப் பேரணியில் உரையாற்றிய நாயுடு, மக்கள் அமைதியான சூழலை விரும்பினால், தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே ஒரே வழி என்றார்.

நாரா லோகேஷ் கண்டனம்:  பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபுவின் பாதுகாப்பு வாகனம் மீது ரௌடி கும்பல் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

மேலும், “இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தாக்குதலில் காயமடைந்த தலைமை பாதுகாப்பு அதிகாரி மது விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.