25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஜார்க்கண்டில் பாஜக படத்துடன் சோதனையிட வந்த வருமான வரித்துறையால் சர்ச்சை

ஜார்க்கண்டில் பாஜக படம் பொறித்த வாகனத்துடன் வருமான வரித்துறை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருக்கு சொந்தமான இடத்திற்கு சோதனையிட வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pic: representive owner

Published On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST

ஜார்க்கண்டில் பாஜக படம் பொறித்த வாகனத்துடன் வருமான வரித்துறை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருக்கு சொந்தமான இடத்திற்கு சோதனையிட வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அழைப்பாணை வழங்கியுள்ளது. இதற்கு ஹேமந்த் சோரன் 3 வார கால அவகாசம் வழங்கக் கோரியிருந்தார்.

இதேபோன்று வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெய்மங்கல் சிங், பிரதீப் யாதவ் ஆகிய இருவருக்கு சொந்தமான இடங்களில் வருவான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். 

மத்திய அரசு, விசாரணை அமைப்புகளை தங்களது அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில் நடைபெற்ற இந்த சோதனை அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் பெர்மோ பகுதியில் சோதனை மேற்கொள்ள வந்த வருமான வரித்துறையினரின் வாகனத்தில் பாஜகவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையினரின் வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் இருந்த பாஜகவின் படம் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த படத்தை பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அகற்றினார். மேலும் அந்த வாகனம் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 

“பாஜகவினரின் வாகனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்ள வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு நேர்மையைப் பற்றி பாடமெடுக்கின்றனர். அவமானத்தால் அவர்கள் இறக்க வேண்டும். விசாரணை அமைப்புகளின் பெயருடன் மத்திய அரசு மக்கள் அமைத்த அரசை அச்சுறுத்த முயன்று வருகிறது” என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சுமத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பேசிய பாஜக சட்டப்பேரவை தலைவர் பாபுலால் மரந்தி இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையினரே பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.