2020, மார்ச் மாதத்துக்குப் பின் முதல் முறை: கரோனா பலி பதிவாகவில்லை

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து பதிவாகி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 625 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2020, மார்ச் மாதத்துக்குப் பின் முதல் முறை: கரோனா பலி பதிவாகவில்லை
2020, மார்ச் மாதத்துக்குப் பின் முதல் முறை: கரோனா பலி பதிவாகவில்லை
Updated on
1 min read

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து பதிவாகி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 625 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை. இது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 625 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,46,62,141 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 14,021 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் பலி எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 5,30,509 ஆகவே உள்ளது.

இதுவரை 4,41,17,611 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். நாட்டில் இதுவரை 219.74 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com