2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரிஷி சுனக், ஜோ பைடனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

ஜி20 நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினர்.

News image
Updated On :15 நவம்பர் 2022, 6:43 am

DIN

ஜி20 நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினர்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று காலை ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் அரங்கிற்கு வந்தனர்.

அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Story image

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.