இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26-ல் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.
இந்த பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டில் ஓசன்சாட்-3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் (இஓஎஸ்-6) மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. இந்த செயற்கைக் கோள் ஏவுதல் நவம்பர் 26 (சனிக்கிழமை) முற்பகல் 11.46 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விஷாலின் ‘லத்தி’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இது குறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் பேசியதாவது: இந்த பிஎஸ்எல்வி-சி54 திட்டத்தில் ஓசன்சாட்-3 புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் (இஓஎஸ்-6) மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. மேலும், அமெரிக்காவினுடைய சிறிய வகை நானோ செயற்கைக் கோள்களும் ஏவப்பட உள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







