
ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடைப்பயணத்தை மகாராஷ்டிரத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இன்று மீண்டும் தொடங்கினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் 74-வது நாளாக ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மகாராஷ்டிரத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, இன்று இரவு மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணத்தை தொடங்க உள்ளார்.
இதையும் படிக்க: டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது!
இந்த நிலையில் நாளை(நவம்பர் 21) சூரத் நகரில் நடைபெறும் இரண்டு பேரணிகளில் கலந்து கொள்வார் என குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு.சர்மா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.