நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மங்களூரு குண்டு வெடிப்பு:  முக்கிய சிசிடிவி காட்சி வெளியீடு

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லும் முன், பேருந்து நிலையம் அருகே ஷெரீக் இருந்த கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது.

News image
Updated On :22 நவம்பர் 2022, 12:03 pm IST

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லும் முன், பேருந்து நிலையம் அருகே ஷெரீக் இருந்த கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது.

சிசிடிவி காட்சியில், ஷெரிக் பெரிய பையை தோளில் சுமந்து கொண்டு, தொப்பி அணிந்தவாறு செல்கிறார்.  இந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் கர்நாடக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த சிசிடிவி காட்சியில் ஷெரீக் தோளில் சுமந்து செல்லும்  பையில் குண்டு இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது, ஷெரீக் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஷெரீக் குணமடைந்தப் பிறகு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீக் (24) என்பது தெரியவந்துள்ளது. அவா் தனது பெயரில் சிம் காா்டு வாங்காமல் உதகையைச் சோ்ந்த ஆசிரியா் சுரேந்தரின் ஆவணங்களைக் கொண்டு கோவையில் சிம் காா்டுகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளியாக கர்நாடக காவல்துறை அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு முன் முகமது ஷெரீக் கோவை சிங்காநல்லூா் பகுதியிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து பல நாள்கள் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை காா் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ஜமேஷா முபீனுக்கும், ஷெரீக்கும் ஏற்கெனவே தொடா்பு இருந்ததா என்பது குறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், தொடர்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.