ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அசாமில் பயங்கர தீ விபத்து! 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் லஹோரிஜன் பகுதியில் இன்று (புதன்கிழமை) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :23 நவம்பர் 2022, 12:12 pm

DIN

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் லஹோரிஜன் பகுதியில் இன்று (புதன்கிழமை) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அசாம் - நாகலாந்து எல்லையில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் 100 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. 

விபத்து நடந்த பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இந்த தீ விபத்தில் அருகில் இருந்த குடிசைகள் எரிந்து நாசமானதாகவும் தீயை விரைந்து அணைத்துவிட்டதாகவும் கர்பி அங்லாங்கின் காவல் கண்காணிப்பாளர் சஞ்சிப் குமார் சைகியா கூறினார்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் அதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.