புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் ஆம் ஆத்மி நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை: கேஜரிவால் இரங்கல்

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சந்தீப் பரத்வாஜ், தில்லியில்  ரஜோரி கார்டன் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

News image
Updated On :25 நவம்பர் 2022, 4:52 am

DIN

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சந்தீப் பரத்வாஜ், தில்லியில்  ரஜோரி கார்டன் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ஆம் ஆத்மி கட்சியின் வர்த்தகப் பிரிவுச் செயலாளர் சந்தீப் பரத்வாஜ், தில்லியில் உள்ள ரஜோரி கார்டன் இல்லத்தில் வியாழக்கிழமை இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று(வியாழக்கிழமை) மாலை 4.40 மணிக்கு ஒரு போன் அழைப்பு வந்ததாகவும் சந்தீப் பரத்வாஜ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதாகவும் தகவல் வந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவர் இறந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினர். 

சந்தீப் பரத்வாஜின் மறைவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.