திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ம.பி.யில் சாலை விபத்து: மூன்று பத்திரிகையாளர்கள் பலி!

மத்தியப் பிரதேசத்தின், ரைசென் மாவட்டத்தில் வேகமாக வந்த டிரக் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் உள்ளூர் பத்திரிகையாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:58 am

DIN

மத்தியப் பிரதேசத்தின், ரைசென் மாவட்டத்தில் வேகமாக வந்த டிரக் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் உள்ளூர் பத்திரிகையாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் லம்பகெடா அருகே நிகழ்ந்ததாக சலாமத்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் தேவேந்திர பால் தெரிவித்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜேஷ் சர்மா, சுனில் சர்மா மற்றும் நரேந்திர தீட்சித் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் வாகனத்துடன் தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் பெர்கெடி அருகே வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

உயிரிழந்தவர்கள் பத்திரிகையின் வாராந்திர வெளியீட்டிற்கான பிரிண்டிங் ஆர்டரை கொடுத்துவிட்டு போபாலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மூன்று மூன்று பத்திரிகையாளர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.