டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜெய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணி

விஜயதசமியை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தொண்டர்கள் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற 'பாத் சஞ்சலன்' பேரணியில் பங்கேற்றனர்.

News image
Updated On :5 அக்டோபர் 2022, 7:20 am

DIN

விஜயதசமியை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தொண்டர்கள் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற 'பாத் சஞ்சலன்' பேரணியில் பங்கேற்றனர்.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இந்த பேரணி ஜெய்ப்பூரில் உள்ள பார்கோட் உள்பட சுமார் 29 இடங்களில் புதன்கிழமை காலை தொடங்கியது. இந்த பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு ஆயுத பூஜை வழிபாடு செய்யப்பட்டது.

Story image

இந்நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சீருடையில் தொண்டர்கள் யோகா, சூரிய நமஸ்காரம் போன்றவற்றின் விளக்கங்களை செய்து காண்பித்தனர். தீவிரவாதம் மற்றும் பிற தேச விரோத சக்திகளை எதிர்கொள்ள ஆர்எஸ்எஸ் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஜெய்ப்பூர் நகரின் வெவ்வேறு பகுதிகளில்  ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பேரணியை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.