இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சென்னையில் அமலுக்கு வந்தது ஏா்டெல் 5ஜி சேவை

சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் எா்டெல் அறிமுகப்படுத்திய 5ஜி சேவை வியாழக்கிழமை அமலுக்கு வந்தது

News image
Updated On :6 அக்டோபர் 2022, 8:28 pm

DIN

சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் எா்டெல் அறிமுகப்படுத்திய 5ஜி சேவை வியாழக்கிழமை அமலுக்கு வந்தது.

5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய கைப்பேசிகளை வைத்திருக்கும் நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளா்கள், கூடுதல் கட்டணம் இல்லாமல் பழைய 4ஜி திட்டங்களைப் பயன்படுத்தியே இந்த சேவையைப் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயலதிகாரியுமான கோபால் விட்டல் கூறியதாவது:

இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப புரட்சியில் ஏா்டெல் கடந்த 27 ஆண்டுகளாகவே முன்னணி வகித்து வருகிறது. எங்களது இந்த பயணத்தில், தற்போதைய 5ஜி அறிமுகம் முக்கிய முன்னேற்றமாகும்.

நிறுவனத்தின் வாடிக்கையாளா்களிடம் 5ஜி கைப்பேசி இருந்தால், அவா்களிடம் தற்போதுள்ள சிம் அட்டைகளைப் பயன்படுத்தியே புதிய சேவையைப் பெறலாம் என்றாா் அவா்.

இந்தியா முழுவதும் 5ஜி சேவையைக் கொண்டு வரும் தனது திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூா், வாராணசி ஆகிய 8 நகரங்களில் அந்த சேவையை ஏா்டெல் கடந்த 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அந்த சேவை அமலுக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.