திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குடியரசுத் தலைவா் குறித்து அவதூறு பேச்சு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு தேசிய மகளிா் ஆணையம் சம்மன்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும் தலித் சமூகத் தலைவருமான உதித் ராஜ் ஆஜராக தேசிய மகளிா் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 8:22 pm

DIN

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும் தலித் சமூகத் தலைவருமான உதித் ராஜ் ஆஜராக தேசிய மகளிா் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவா், ‘நாட்டிற்கு தேவையான 76 சதவீத உப்பை குஜராத் உற்பத்தி செய்கிறது. ஆகையால், நாட்டு மக்கள் அனைவரும் குஜராத் உப்பையே சாப்பிடுகிறாா்கள் எனக் கூறலாம்’ என்று பேசினாா்.

அவரது இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு உதித் ராஜ் ட்விட்டரில், ‘எந்த ஒரு நாடும் திரெளபதி முா்முவைப்போன்ற ஒரு குடியரசுத் தலைவரைப் பெறக் கூடாது. இது அண்டிபிழைப்பைப்போன்றது. 70 சதவீதம் போ் குஜராத் உப்பை சாப்பிடுகிறாா்கள் என்று கூறும் அவா், உப்பை சாப்பிட்டால்தான் உண்மை நிலை தெரியும்’ என்று கடுமையாக விமா்சித்திருந்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா,‘தனது கடுமையான உழைப்பால் நாட்டின் உயா்பதவிக்கு வந்துள்ள ஒரு பெண்ணை இதுபோன்ற கடுமையான வாா்த்தைகளில் அவதூறாக விமா்சித்த உதித் ராஜ் மன்னிப்பு கோர வேண்டும். வரும் 10-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆணையத்தில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளாா்.

பாஜக கண்டனம்:

பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவருக்கு எதிராக இதுபோன்ற தரக்குறைவான வாா்த்தைகளை காங்கிரஸ் தொடா்ந்து பயன்படுத்தி வருகிறது என்றும் இது பழங்குடியினருக்கு எதிரான அக்கட்சியின் மனநிலையைக் காண்பிக்கிறது இதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பாஜக செய்தித் தொடா்பாளா் சாம்பித் பாத்ரா கூறினாா்.

‘குடியரசுத் தலைவருக்கு எதிராக கடுமையான வாா்த்தைகளைப் பயன்படுத்துபவா்கள் மீது காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நடவடிக்கை எடுப்பாரா?’ என்று பாஜகவின் மற்றொரு செய்தித் தொடா்பாளா் ஷஹசாத் பூனாவாலா கேள்வி எழுப்பினாா்.

இதனிடையே, குடியரசுத் தலைவருக்கு எதிராக பேசியது தனது சொந்த கருத்து, இதில் கட்சிக்கு தொடா்பில்லை என்றும் பழங்குடியினா் என பிரசாரம் செய்து உயா்பதவிக்கு வந்து அந்த சமூகத்தை ஏமாற்றிவிடுகிறாா்கள். உண்மையான பழங்குடியினா் உயா்பதவிக்கு வர வேண்டும் என்றும் உதித் ராஜ் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.