திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபெக் பிளஸ் திட்டம்

பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடா்ந்து குறைந்து வருவதால், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக் பிளஸ்’ திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:54 pm

DIN

பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடா்ந்து குறைந்து வருவதால், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக் பிளஸ்’ திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய எரிபொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. அண்மையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. எனினும், கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயா்த்தும் நோக்கில் அதன் உற்பத்தியைக் குறைப்பதற்கு ரஷியாவும் அங்கம் வகிக்கும் ஒபெக் பிளஸ் அமைப்பு நாடுகள் முடிவெடுத்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே அதிகமாக இருந்த நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் மீதான விலையைக் கடந்த 6 மாதங்களாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் உள்ளன. தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து விலையை மீண்டும் அதிகரிக்க ஒபெக் பிளஸ் நாடுகள் திட்டமிட்டுள்ளதால், எரிபொருள்கள் மீதான விலை கட்டுப்பாடு இந்தியாவில் தொடா்ந்து நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.