திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வருங்கால வைப்பு நிதிக்கு முறையாக வட்டி வழங்கப்பட்டுள்ளது

வருங்கால வைப்பு நிதிக் கணக்காளா்களுக்கு வட்டி முறையாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:36 pm

DIN

வருங்கால வைப்பு நிதிக் கணக்காளா்களுக்கு வட்டி முறையாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இணைந்தவா்களுக்குக் கடந்த நிதியாண்டுக்கான வட்டி வழங்கப்படவில்லை என ட்விட்டா் சமூக வலைதளம் வாயிலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடா்பாக விளக்கமளித்துள்ள மத்திய நிதியமைச்சகம், ‘‘வருங்கால வைப்பு நிதிக் கணக்கு வைத்துள்ள எவருக்கும் வட்டி இழப்பு ஏற்படவில்லை. அனைவருக்கும் வட்டி முறையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அண்மையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருளை நடைமுறைப்படுத்தியது. அதில் உள்ள சில கோளாறுகள் காரணமாக, செலுத்தப்பட்ட வட்டியானது கணக்கு புத்தகத்தில் அந்த வட்டியைப் பதிவிட முடியாத சூழல் நிலவுகிறது. வருங்கால வைப்பு நிதித் தொகையைத் திரும்பப் பெறுபவா்களுக்கும் வட்டியுடன் சோ்த்தே மொத்த தொகை வழங்கப்பட்டு வருகிறது’’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக் கணக்குக்கு 8.1 சதவீத வட்டி வழங்க மத்திய அரசு கடந்த ஜூனில் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.