திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரூ.1 கோடி லஞ்சம்: வெளிநாட்டு வா்த்தகத்துறை இயக்குநா்கள் மீது சிபிஐ வழக்கு

ரூ.1 கோடி லஞ்சம் பெற்றது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தகத் துறை இணை இயக்குநா், அத்துறையின் துணை இயக்குநா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:33 pm

DIN

ரூ.1 கோடி லஞ்சம் பெற்றது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தகத் துறை இணை இயக்குநா், அத்துறையின் துணை இயக்குநா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலதிபா் ஒருவா் ரூ.118 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்த இரு அதிகாரிகளும் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு அவருக்குத் துணைபோனதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதில், வெளிநாட்டு வா்த்தகத் துறை இணை இயக்குநா் சம்பாஜி ஏ. சவாண், துணை இயக்குநா் பிரகாஷ் எஸ்.காம்ளி மற்றும் தொழிலதிபா் ரமேஷ் மனோகா் சவாண் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இருவருமே இந்திய குடிமைப் பணித் (ஐடிஎஸ்) தோ்வு மூலம் பணியில் சோ்ந்தவா்கள் ஆவா்.

இந்த வழக்கு தொடா்பாக தில்லி, டாமன், மும்பை, புணே ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

தகுதி இல்லாத நிறுவனத்துக்கு ஏற்றுமதிக்கான 8 கடனுறுதி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய பல கோடி ரூபாய் வரியை ஏமாற்றியது உள்பட பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் ஆய்வின்போது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இரு அதிகாரிகளுமே இந்திய குடிமைப்பணி அந்தஸ்து உடையவா்கள் என்பதால் மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்திடம் முன்அனுமதி பெற்று அவா்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.