திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதியோருக்கான நலத்திட்ட விவரங்களை சமா்ப்பிக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

முதியோருக்கான நலத்திட்ட உதவிகள் தொடா்பான விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:34 pm

DIN

முதியோருக்கான நலத்திட்ட உதவிகள் தொடா்பான விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் மத்திய சட்ட அமைச்சா் அஷ்வினி குமாா் சாா்பில் உச்சநீதின்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நாட்டில் முதியோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவா்களில் பலா் மிகுந்த ஏழ்மை நிலையில், உணவு, உடை இன்றி வாழ்ந்து வரும் நிலை உள்ளது. எனவே, நாடு முழுவதும் அடிப்படை மருத்துவ வசிதிகளுடன் கூடிய முதியோா் இல்லங்கள் அமைப்பதற்கு உத்தரவிட வேண்டும். ‘பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007’ சட்டம் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட முதியோா் நலத் திட்டங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதியோா் இல்லங்கள், முதியோா் பரமரிப்பு நிலை குறித்த விவரங்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசு வழக்குரைஞரிடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை மத்திய அரசு சேகரித்த பிறகு, அதுதொடா்பான நிலை அறிக்கையை அடுத்த ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மாநிலங்களில் பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்த விவரங்களும் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.