குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் படேல் பாஜக உறுப்பினர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (அக்டோபர் 8) மாலை நடந்துள்ளது. இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான ஆனந்த் படேல், பாஜக தலைவர் பாபு அகீர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் படேல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவருக்கு ஆதரவாக பாடல் இசைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கார்த்தியின் ‘சர்தார்’: முதல் பாடல் வெளியாவது எப்போது?
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாக்குதலுக்கு உள்ளான இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் மக்களை உறுப்பினர் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் அரசியலுக்காக காங்கிரஸ் சார்பில் நிகழ்த்தப்படுவதாகும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகே உண்மை என்ன என்பது தெரிய வரும் எனவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

