தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது!

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமால் ஷிண்டேவின் கைப்பேசியைத் திருடியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நபர் அக்.6-ம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

News image
Updated On :10 அக்டோபர் 2022, 10:01 am

DIN


மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமால் ஷிண்டேவின் கைப்பேசியைத் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டே மும்பைக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​அவரது கைப்பேசியை கௌரவ் என்றவர் திருடியதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஷிண்டே தாதர் ஸ்டேஷனை அடைவதற்கு முன்பு தனது கைபேசியை இருக்கையில் வைத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கைபேசியை ஒருவர் திருடியுள்ளார். 

இதையடுத்து, ஷிண்டேவின் மகள் குற்றவாளியை கையும் களவுமாகப் பிடித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மந்தர் பிரமோத் கௌரவ் என அடையாளம் காணப்பட்டு, அரசு ரயில்வே காவல்துறையால் கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

சோலாப்பூரில் வசிக்கும் கௌரவ், முன்னாள் முதல்வர் பயணம் செய்த அதே பெட்டியில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.