புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அக்.15-ல் எகிப்து பயணம் மேற்கொள்கிறார் ஜெய்சங்கர்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அக்டோபர் 15-ம் தேதி இரண்டு நாள் பயணமாக எகிப்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார். 

News image
Updated On :13 அக்டோபர் 2022, 10:24 am

DIN

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அக்டோபர் 15-ம் தேதி இரண்டு நாள் பயணமாக எகிப்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார். 

இந்த பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். இது அவருக்கு முதல் எகிப்து பயணம் ஆகும். 

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எகிப்தில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்புகொள்வதுடன், எகிப்திய மற்றும் இந்திய வர்த்தக சமூகத்தின் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். 

மேலும், ஆப்ரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்புகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.