திரிபுரா மாநிலத்தின் உனாகோட்டி மாவட்டத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மாணிக் சஹா பேசியதாவது: “ கடந்த 35 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியில் திரிபுரா தாக்குதல்கள் மற்றும் கொலைகளை மட்டுமே சந்தித்துள்ளது. அதேபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது நடைபெற்ற வன்முறைகளையும் நீங்கள் மறக்க கூடாது. தற்போது மக்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை பாஜக மட்டுமே. பாஜகவினை பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிடோர் சிறப்பாக வழிநடத்தி செல்கின்றனர். பாஜகவிற்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் நலனுக்காகவே உழைத்து வருகிறோம். மற்றவர்கள் அனைவருக்கும் வன்முறை மற்றும் கலவரங்களுடன் தொடர்புடைய நீண்ட வரலாறே இருக்கிறது. திரிபுராவில் குறைந்தது 100 பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களாவது கொல்லப்பட்டிருப்பார்கள். ஆயிரக்கணக்கானோர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள்.” என்றார்.