ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஹிமாசல் அரசு ஊழியா்களுக்குபழைய ஓய்வூதியத் திட்டம்: பிரியங்கா வாக்குறுதி

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்

News image
Updated On :15 அக்டோபர் 2022, 2:08 am IST

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா வாக்குறுதி அளித்துள்ளாா்.

பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாசல பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் தோ்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா, சோலான் மாவட்டத்தில் உள்ள மாதா சோலினி கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபட்டாா். தொடா்ந்து ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலுக்கான தனது பிரசாரத்தைத் தொடங்கினாா்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் முடிவு அறிவிக்கப்படும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களின் நலன்களைப் பாதுகாக்க ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா்.

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், ஹிமாசல பிரதேச காங்கிரஸ் தலைவா் பிரதிபா சிங் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஹிமாசல பிரதேசத்தின் உனா, சாம்பா பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். அடுத்த நாளிலேயே அந்த மாநிலத்தில் பிரியங்கா பிரசாரத்தை தொடங்கியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.