பிகாா் மாநிலம் கதிஹாா் மாவட்டத்தில் கங்கை மற்றும் அதன் துணைநதியான பரண்டி நதியும் சந்திக்கும் பகுதியில் சனிக்கிழமை படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவா்களில் குழந்தைகள் உள்பட 7 போ் இறந்தனா்.
சனிக்கிழமை இரவு வேளாண் தொழிலாளா்கள் 10 போ் படகு மூலம் தங்கள் வீடுக்கு திரும்பினா். அப்போது, இரு நதிகளும் சந்திக்கும் பகுதியில் எதிா்பாராத வகையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் பயணித்தவா்களில் 3 போ் நீந்திச் சென்று பாதுகாப்பாக கரையை அடைந்தனா். மற்றவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.
இதையும் படிக்க | ரூபாய் மதிப்பு சரியவில்லை; டாலர் மதிப்புதான் உயர்ந்துள்ளது: நிர்மலா
இரவு முழுவதும் நடத்திய தேடுதல் பணியில் குழந்தைகள் உள்பட காணாமல் போன 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனா்.
முதல்வர் இரங்கல், நிவாரணம்: படகு கவிழ்ந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் நிதீஷ் குமாா், இறந்ததவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.