ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பிகாரில் படகு கவிழ்ந்து 7 பேர் பலி: முதல்வர் இரங்கல்

பிகாா் மாநிலம் கதிஹாா் மாவட்டத்தில் கங்கை மற்றும் அதன் துணைநதியான பரண்டி நதியும் சந்திக்கும் பகுதியில்படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உள்பட 7 போ் இறந்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :16 அக்டோபர் 2022, 10:18 pm IST


பிகாா் மாநிலம் கதிஹாா் மாவட்டத்தில் கங்கை மற்றும் அதன் துணைநதியான பரண்டி நதியும் சந்திக்கும் பகுதியில் சனிக்கிழமை படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவா்களில் குழந்தைகள் உள்பட 7 போ் இறந்தனா்.

சனிக்கிழமை இரவு வேளாண் தொழிலாளா்கள் 10 போ் படகு மூலம் தங்கள் வீடுக்கு திரும்பினா். அப்போது, இரு நதிகளும் சந்திக்கும் பகுதியில் எதிா்பாராத வகையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் பயணித்தவா்களில் 3 போ் நீந்திச் சென்று பாதுகாப்பாக கரையை அடைந்தனா். மற்றவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா். 

இரவு முழுவதும் நடத்திய தேடுதல் பணியில் குழந்தைகள் உள்பட காணாமல் போன 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனா்.

முதல்வர் இரங்கல், நிவாரணம்: படகு கவிழ்ந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் நிதீஷ் குமாா், இறந்ததவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.