ஈரானின் தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை இரவு தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள செல்களுக்கும் பரவத் தொடங்கியது.
பல மணி நேரங்களுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாகவும், கைதிகள் யாரும் தப்பிக்கவில்லை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தன.
இந்த தீ விபத்தில் கைதிகள் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
எவின் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைக் குழு கைதிகளை மீண்டும் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடுவதாக சிறைத்துறை புகார் அளித்துள்ளது.