உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நவம்பர் 9ஆம் தேதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பார்.