ஆந்திரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகம், கேரளம், கர்நாடகத்தைத் தொடர்ந்து ஆந்திரத்தில் தற்போது நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஆந்திரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று கர்னூல் பகுதியில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதுடன் அவருடன் பயணம் செய்து வருகின்றனர். நாளை(அக்.21) வரை அவர் ஆந்திரத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு!

பிகாரில் 21 ஆண்டுக்கால என்டிஏ ஆட்சி தோல்வியடைந்தது: தேஜஸ்வி!

மும்பையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

