மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கட்டடம் இடிந்து விழப்போவதை கணித்த தலைமைப் பேராசிரியர்; நூலிழையில் தப்பியவர்கள்

முன்கூட்டியே கணித்த தலைமைப் பேராசிரியர், அங்கிருந்தவர்களை வெளியேற்றிய அடுத்த நொடியே அவர் கணித்ததுபோல நடந்தது பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

News image
கட்டடம் இடிந்து விழப்போவதை கணித்த தலைமைப் பேராசிரியர்; நூலிழையில் தப்பியவர்கள்
Updated On :22 அக்டோபர் 2022, 10:45 am

DIN


மைசூரு: பழைமையான கல்லூரியின் வேதியியல் ஆய்வுக் கூட கட்டடம் இடிந்து விழப்போவதை முன்கூட்டியே கணித்த தலைமைப் பேராசிரியர், அங்கிருந்தவர்களை வெளியேற்றிய அடுத்த நொடியே அவர் கணித்ததுபோல நடந்தது பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மைசூருவில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாராணி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அனைவரும், வேதியியல் ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய அடுத்த நொடியே அது இடிந்து விழுந்தது. நூலிழையில் உயிர் தப்பிய அனைவரும் அடைந்த அதிர்ச்சி சற்று நேரம் வரை அகலவில்லை.

இதற்குக் காரணம், கல்லூரி தலைமைப் பேராசிரியர் ரவியின் சமயோஜித புத்திதான் காரணம், அவரால்தான் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்கிறார்கள்.

வேதியியல் ஆய்வுக் கூடத்தின் மேல்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதாகவும், விரிசல்கள் அதிகரித்திருப்பதாகவும் துறை தலைவர் தலைமைப் பேராசிரியரிடம் கூறியுள்ளார்.

உடனே நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த அவர், உடனடியாக அங்கிருந்து அனைவரும் வெளியேறி, மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு கதவைப் பூட்டுமாறு உத்தரவிட்டார்.

அவர் சொன்னபடி கதவைப் பூட்டியதும், மைசூரு தொகுதி எம்எல்ஏவுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து, கல்லூரியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.