நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கட்டடம் இடிந்து விழப்போவதை கணித்த தலைமைப் பேராசிரியர்; நூலிழையில் தப்பியவர்கள்

முன்கூட்டியே கணித்த தலைமைப் பேராசிரியர், அங்கிருந்தவர்களை வெளியேற்றிய அடுத்த நொடியே அவர் கணித்ததுபோல நடந்தது பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

News image

கட்டடம் இடிந்து விழப்போவதை கணித்த தலைமைப் பேராசிரியர்; நூலிழையில் தப்பியவர்கள்

Updated On :22 அக்டோபர் 2022, 4:15 pm IST


மைசூரு: பழைமையான கல்லூரியின் வேதியியல் ஆய்வுக் கூட கட்டடம் இடிந்து விழப்போவதை முன்கூட்டியே கணித்த தலைமைப் பேராசிரியர், அங்கிருந்தவர்களை வெளியேற்றிய அடுத்த நொடியே அவர் கணித்ததுபோல நடந்தது பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மைசூருவில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாராணி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அனைவரும், வேதியியல் ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய அடுத்த நொடியே அது இடிந்து விழுந்தது. நூலிழையில் உயிர் தப்பிய அனைவரும் அடைந்த அதிர்ச்சி சற்று நேரம் வரை அகலவில்லை.

இதற்குக் காரணம், கல்லூரி தலைமைப் பேராசிரியர் ரவியின் சமயோஜித புத்திதான் காரணம், அவரால்தான் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்கிறார்கள்.

வேதியியல் ஆய்வுக் கூடத்தின் மேல்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதாகவும், விரிசல்கள் அதிகரித்திருப்பதாகவும் துறை தலைவர் தலைமைப் பேராசிரியரிடம் கூறியுள்ளார்.

உடனே நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த அவர், உடனடியாக அங்கிருந்து அனைவரும் வெளியேறி, மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு கதவைப் பூட்டுமாறு உத்தரவிட்டார்.

அவர் சொன்னபடி கதவைப் பூட்டியதும், மைசூரு தொகுதி எம்எல்ஏவுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து, கல்லூரியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.